Sunday, 30 September 2012

கண்களைக் கண்டாய்..!


விழி கூறும்
மொழி அறிந்தவர் யாரோ?

பெண்மை பேசும்..
மொழி புரிந்தவர் யாரோ?

புரிந்தவர் விலகி விடுவர்..!
புரியாமல் இருப்பதே நலம்..!

விழி உண்மை
கூறிவிடும்..!!

முகம்....
மனதை காட்டிவிடும்..!!

வாய் பொய் மட்டுமே
உரைக்கும்..!!

நம்பாதே.. பெண்ணின்
வாய்ப்பேச்சை..!!

மனதை நம்பு..!

Friday, 28 September 2012

கூழாங்கல்


                                               கூழாங்கற்களின் தினம்...
கடந்து செல்வதைத் தவிர ..
எதுவும் பெற்றுத் தராத ...பாதை
ஓய்வு அற்றது..!!


நதியில் கரைபுரளும் ..
கூழாங்கற்கலுக்கு...
நதியிடம் சொல்லயெதும் இல்லை




 நதியின் பாதையில் சென்று ...

கடலைச்சேர்வதுதான்...!!




வாழ்வும் அப்படியே..!!

Thursday, 6 September 2012

கடற்கரையிலே...

கடற்கரையிலே...
நான் இருந்தேனே..!

எதற்க்காக  நீயும்
வந்து  நிற்க்கிறாய்?

கடல் அறியுமோ...
காதலின் ஆழத்தை..!

காதலும் அறியுமோ...
என் உள்ளத்தை..?

 நான் கட்டிய
கடற்கரை மணல்வீடு...
அலையால் அழிவது போலே...!

காற்றும்  கதறியது..
கரை புரளும்...
அலையை கண்டு..!!

அலையால்...
கண் இமைக்கும் நொடியில்...
அள்ளிக்கொண்டு போன..
என் மணல்கோட்டை(மனக்கோட்டை)..,

மீண்டும்...
கட்டலாகாதோ..?
மணல்  கரைந்தோடலாம்..
கடல்  கரையாதே, அழியாதே!!



கனவு கரையலாம்..!!
காதல் கரையது..!!