Sunday, 4 December 2011

அந்தரங்கம்....!! நுழையாதே..


உன்....
கனியிதழ் கசியும்
கனிமொழிகளை
என்னிடம் சேர்க்கும்
கைபேசி...!!

என் அறையில்
இருக்கும்
உன் நினைவின்
பரிசுகள்.....


 என்னோடு
இருக்கும்
உன் புகைப்படம்..




முகம் பார்க்கையில்
கண்ணாடி-முன்
தோன்றும்...உந்தன்
பிம்பம்...

நான்
உறங்குகையில்
என்னோடு
உறங்கும்
உன் நினைவுகள்...




இவைகளுக்கு....
நான் அளித்த..
முத்தங்களின் 
ஈரம்.. இன்னும்..
காயவில்லை...!!  



நாம் நடந்த..
பாதைகள்..!
அமர்ந்த ...
இடங்கள்...!
ருசித்த  உணவுகள்...!
நான் ரசித்த -உன்
செயல்கள்....


இவைகளின்..
நினைவுகளும்-என்
கண்களைவிட்டு...
 நீங்கவில்லை...!!

 நீ கொடுத்த..
மல்லிகை...பூ..,
காய்ந்தாலும்...
இன்னும்-உயிர்
வாழ்கிறது-என்..
புத்தக...
பக்கங்களிள்.. 




நீ பேசிய..
வார்த்தைகளின்...
ஓசை..-என் 
காதினில்..
கேட்டுக்கொண்டே...
இருக்கும்  நிலை
மாறவில்லை...



என்னோடு...
இருப்பேன்- என்றாய்..!!

வாழ்வில் - என்னை 
இழக்கமாட்டேன்..என்றாய்.!!

என்னோடு - இருப்பதே 
ஆனந்தம்..என்றாய்.!!



இப்படி...
இருக்கையில்...


                                
                                 நீ மணப்பெண்...
                                 பார்த்துவிட்டு 
                                 வந்த.. சேதியை..
                                 என்னுடன் - 
                                 பகிர்ந்துகொள்கிறாயே...!!
                                 
                                 என் விருப்பம்
                                 கேட்டு நிற்க்கிறாயே..!! 
                                 என்ன செய்வேன் - நான்!!?
                               

                                 உதடுகள்..
                                 உன்னிடம்...
                                 புன்னகைத்தாலும்...
                                 என்  -கண்ணில்..
                                 காதல்...கரையத் 
                                 தொடங்கிவிட்டது...!!    
                                 என் அன்பு - மாறவில்லை..!!



                                
என் காதலை-விட
உன் நட்பிற்கு...
வல்லமை - அதிகம் போலும்!!!!
தொடரட்டும் - நம் அன்பு
நட்பாக.....~~~
நண்பணே....!!

















..

Thursday, 10 November 2011

அமாவாசை... நாள்!




                                            அன்று ...
                                            அவள்
                                            இமைகள்..மூடியும்..
                                            உறக்கம்  வரவில்லை..!!
 
                                            நினைவுகள்...
                                            விடியலை...  நோக்கியே...
                                            நகர்ந்தது...!!  
                                             
                                            ஈரொன்பதுஆண்டுகள்
                                           இதுவரை..
                                           செல்லாத...
                                           தனிமை பயணம்...
                                           அடுத்த நாள்...
                                           நிகழவிருப்பதே...
                                           காரணமோ...என
                                           எண்ணியபடியே ....




                                            அவளது இரவு....
                                                  நகர்ந்தது...!!
                                     அதிகாலை...அவனை..
                                         காணப்போகிறாள்..
                                   
யார் அவன்...!!?

கரிய மேகத்தினுள்..
ஒளிரும்..மின்னலின்..
சிரிப்பும்..!!
                                             
இரவும் ..
பகலும்...
இமைக்காமல்..
இயக்கமும்...!!


வானத்து...
நிலவை-போல்
தனிமையும்... ஆட்கொண்டவன்...!!

மென்பொருள்...
சலித்துப்போகவே...
மனம் விரும்பும்...
வேளாண்மை...
வேண்டும் என்பவன்..!!



பாசத்தின்...
வாயில்தனை...
பக்குவமாக...கையாலும்
பண்பாளன்..!!


யார் அவள்..!!

தனிமையை..
தனதாக்கிக் கொண்டவள்..!!

உலகின்..பன்முகம்,
உணராத..
அன்பின் முகத்தவள்..!!

கவலை -என்பதை
கனவிலும்..
காணாத பறவையவள் ..!!
ஆயிரம் பேர் ..
கூடும்... பேருந்து நிலையம்.!!
அலைமோதும்...
கண்களுடன்....
தேடியே... நிற்கிறாள் ..அவனை!!


கணினியின் தேடலைவிட..
கண்களின் தேடல்...
கவியின் கவிதையை-போல்
புரியவில்லை - அவளுக்கு..!!
முதல் சந்திப்பு...!!

"பார்ப்பேனோ..?" - என
பரிதவித்தாள்..!!
பார்த்துவிட்டள்.. அவனை!!

அவனும் நோகினான்..
அவளும்  நோகினாள்..
காதல்  தான் பூக்குமோ..??


இல்லை...

உன்னதமான...
நட்பும்.~~.பூத்ததே..!! 

Saturday, 5 November 2011

இனிய இரவு...

இதமான..
 நினைவுகள்..

இனிமையான..
  கனவுகள்...

இன்பமான..
இரவிலே..
இன்னிசைக்க...
 இனிய..
  இரவு
 வணக்கம்..
இனிய..
தோழமைகளூக்கு.. ..








Thursday, 3 November 2011

முதல் வரி....

என் மன வானில்...


பறக்க...


 நினைக்கும்..
 

 நினைவுகளே..!!
 

 வருக..வருக..!!