Sunday, 26 August 2012

பைத்தியக்காரன்.. இவரா?


தாரபுரம் பகுதியில் வாழும் அனைவரும் 
அறிந்த ஒரு நபர்..!!

இருப்பது குப்பைமேடாயினும்..
கையில் எப்பொழுதும்..
செய்தித்தாளோடுதான் இருபார்..!!

தாரை பேருந்து  நிலையம்,
தாலுக்கா ஆபிசு, அண்ணா சிலை....
இப்படி பல இடங்களில் காணலாம்..!!

தன் மடியில் எப்பொதும் 
ஒரு மூட்டை வைத்திருப்பர்...
அதில் முழுக்க புத்தகங்களும்,
செய்தித்தாள்களும் தான்..!!

இவரை பற்றி அறிய ஆவால்..
கொண்டேன்... 
பல்வேறு கதைககள்..
உலவுகிறது...!!

பைத்தியம் யார்...?
இவர்கள்...
அல்ல... 

என்பது மட்டும் உறுதி!



Saturday, 25 August 2012

குழந்தைப்பருவம்


மகிழ்ச்சி தவழும் பருவம்...
மானிடம் இழக்கும் பருவம்...
மறுமுறை வாழநினைக்கும் பருவம்...!



சோகம் என்பதை உணாராது..
சுகம் என்பது என்ன ?
என்பதையும் அறியா பருவம்...!


வாழ்நாள்  முழுவதும்
வேண்டும்....
மழலையின் மனமும், குணமும்..
தருவாய் இறைவா..~!

கல்லூரி !



மறக்க முடியாமல்
தவிக்கிறேன்...!

நட்பின் பிரிவுகளையும்,
கல்லூரி கலாட்டாக்களையும்...!
எத்திசை தேடியும்
அமையவில்லை...
நமது நட்பு

தோழிகளே!


சிவன் மலை

சொல்லாமல் சொல்லும்...
பல்வேறு கதைகள் !

எத்தனை கனவுகள்,
எத்தனை கண்ணிர்கள்..
எத்தனை வேண்டல்கள்..
கோவில் படிகள்,
ஏறும் அவ்வேளையில்...

மறவேன்!